இதுவரை ''TVK விஜய்'' க்கு ஆதரவு கரம் நீட்டி வந்த பிரபல பத்திரிக்கையாளர் தற்போது எதிர்வினை ஆற்றியுள்ளார்...!
தற்போது தமிழக அரசியல் பல முனை போட்டியாக சூடு பிடித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே இதில் இவ்வாறு அமைய முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் கோலுன்றியிருந்த "தளபதி விஜய்" அவர்கள் மட்டுமே.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த நிலையில் அதன் மூலம் தற்போது அவர் ஈட்டும் வருவாய் 250 கோடி இதனை வேண்டாம் என்று உதறிவிட்டு மக்கள் செய்ய வருவதே. விஜய் அவர்கள் தனது அரசியல் பயணத்தை அறிவிக்கும் முன்னரே இவருக்கு பெருமளவு ஆதரவு கரம் நீடியவர் ரங்கராஜ் பாண்டே. விஜய் அரசியல் அறிக்கைகளுக்கு பின்னர் மிக அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் தற்போது விஜய் அவர்களின் அரசியல் பற்றி பெரிதும் எதிர்வினை ஆற்றியுள்ளார்.விஜய் அவர்கள் ஆளுநராக இருக்கும் R.N. ரவி அவர்களை சந்தித்தது பற்றியும் மத்திய அரசை விஜய் எதிர்ப்பது பற்றியும் நக்கலாக விமர்சித்துள்ளார். "பனை மரத்தில் ஒரு குத்து தென்னை மரத்தில் ஒரு குத்து" என வடிவேலுவின் நகைச்சுவையை மேற்கோள் காட்டி கிண்டல் அடித்துள்ளார்.